தேடல்

Tuesday 27 December 2011

பண நோய்க் கிருமிகள்

எலிக்கு பயந்தோடி,
புலியிடம் சிக்கிய கதை..
வெள்ளையர்களை விரட்டி விட்டு,
ஊழல் கொள்ளையர்களிடம் சிக்கி வதை..!


லஞ்சமில்லா கீழக்கரையை உருவாக்குவோம்
லஞ்சமும், ஊழலும்,
தேசத்தை நசுக்கிடும் தீவினைகள்..
பஞ்சமும், பட்டினிச் சாவுகளும்,
பாரத பூமியின் ஊழ்வினைகள் ...


தேகப் பிணி நீக்கிய,
மருத்துவருக்கும் மாரடைப்பு.!
காலாவதி மருந்துகள் களத்தில்,
பிணம் தின்னும் நாய்கள்..?

ஊழல் பிணி தொற்றிய,
'இராச' நரிகளும் ஊளையிடுகிறது..
தின்ற தீனி போதாதென்று...

லஞ்சப் பிணி இல்லாத தலைகளுக்கு,
இங்கு பஞ்சம் !
பிச்சை எடுப்பது.. நாகரீகம்.?
ஆம்... கவுரவ பிச்சை..!

திரும்பிய திசைகளெல்லாம்,
நாய்களும்,
நரிகளும்,
கவுரவ பிச்சைக்காரர்களும்...


கைது செய்யப்பட்ட கவுரவ பிச்சைகாரர்கள்

உழவனுக்கு ஆண்டில்,
ஒரு நாள் அறுவடை..
உனக்கோ,
ஆண்டு முழுதும் அறுவடை..!

ஊழல்
சுனாமியில் சிக்கிய,
தேசமெனும் கப்பல் தத்தளிக்கிறது ..
கனவுகளை மட்டும் நங்கூரமிட்டு ...
ஊழலுக்கான நோபல் பரிசு,
உலக அரங்கில் போட்டியின்றி தேர்வு..
உலக மகா தலை குனிவு..?

காகித பணத்திற்காய்,
தன்மானங்கள் விற்று,
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது !

உள்ளத்தை சிறையிடும்,
'கேவல மிருகமே..
நீ நிச்சயம்
உணர்ந்திடாத வரை,
ஊழல் ஒழிந்திடாது..!

1 comment: