தேடல்

Monday 30 January 2012

எரிதழல் கொண்டு வா !



பசிப்பிணி ஓலங்கள்
ஒலிக்கின்ற தேசம்..
உடலியங்கியும்,
உயிரற்ற சுவாசம் ...
எப்போது தீரும்
இந்த பட்டினிச் சாபம்.?

வறுமையின் வாசல்கள்,
ஏழை நெஞ்சங்களின் நுழைவு வாயில்.!
பசிக் கொடுமையின் கொத்தலங்கள்,
பட்டினிச் சாவுகளின் கூடாரம்..!



மெலிந்த உடலும்,
ஒட்டிய வயிறும்,
குழிந்த கன்னமும்..
நலிவு அச்சின் வார்ப்புகள் !
இழிவு தான் முடிவோ.?



கையேந்தியே
பழக்கப்பட்ட கைகள் ஓரணியாய்,
பண முதலைகள்,
வீடுகளுக்குள் ஊர்வலம்...
சுய மரியாதை ஒழிப்புப் பேரணியாய்.!

பணம் கொளுத்த
பாக்கியவான்கள் வீசும்,
தூண்டில் முட்களில் அகப்படுகிறது..
பாமரனின் அடிமைத்தனம் !



கல்
மனம் படைத்த,
மானங்கெட்ட பாவிகள்
கடத்துவது..
நியாய விலை கடையில்...
ரேஷன் அரிசியை.!




கால்
வயிறு நிறைய,
வழியில்லா அப்பாவிகள்
திருடுவது..
குப்பைத் தொட்டியில்...
எச்சில் இலைகளை..!




மனிதா,
மண்ணுக்குள்
மறையும் முன்
மனிதத்தையாவது விட்டு விட்டு செல்..




நம்
சிறகு முளைக்கும் சிந்தனைகளை,
சிதறடிக்கும் சருகுகளை சேர்த்திடு..
சீரிய எண்ணங்களால் எரிபொருள் ஏற்று !
எரிதழல் கொண்டு வா...



நெருப்பின்
சுவையறியா..
விரல் கொண்ட மழலையும்,
ஒரு நாள்,
எரிதழல் கொண்டு துரத்தும்...
பிணிகளை !

1 comment:

  1. இன்ன வரியென்று
    இடம் சுட்டி விளக்கமுடியா வண்ணம்
    இதயத்தை கணக்கச் செய்து, கண்ணீரையும்
    வரவழைக்கிறது

    ReplyDelete