தேடல்

Friday 19 April 2013

கண்ணீர் தேசம்

சொந்த மண்ணில்
அடிமைகளான சோகங்கள்..
அந்நிய மண்ணில்
அகதிகளான பாரங்கள்...

தமிழனின்
வியர்வையில் விளைந்த
இலங்கைத் தீவு..
சிங்களனின்
குறுக்குப் புத்தியால்
இலக்காய் போனது !

லெமூரியா
பெற்றெடுத்த,
புதல்வர்களின் பட்டியலில்..
ஈழத் தமிழன் மட்டும் தான்
ஈனப் பிறவி ஆனானோ.?
அப்பாவித் தமிழினத்தின்
கனவு தேசம்
கண்ணீர் தேசம் ஆகியதோ.!

இலங்கையின்
இரத்த சகதியில்
விளைந்த நறுமணங்கள்
கிராம்பும்,
ஏலக்காயும்,
ஜாதிக்காயும்,
தேயிலையும்,
இன்னும் சுடுகாட்டின்
வாசனையை சுமக்கிறது..?


நவீன ஹிட்லரின்
நாச வேலைகளால்,
உலகின் 'மாபெரும் மயானம்'
உறுதியாக ஊன்றப்பட்டுள்ளது
இனப் படுகொலையின்
மன சாட்சியாக .!

சிங்கள
முசோலினிகளின்
'மாயை வெற்றி'க்கு
அநாதை மழலைகளும்
விதவைத் தாய்களும்
சிதைந்த சொந்தங்களும்
விலையாகி நிற்கிறார்கள்...

வலப்புறம் போராளிகள்..
இடப்புறம் எதிராளிகள்..
நடுப்புறம் சிக்கிய 'அப்பாவிகள்'.!
இங்கு
இருபுறமும் புறப்பட்ட
'துப்பாக்கி தோட்டாக்கள்'
துளைத்துச் சிதறியது
அப்பாவிகளின் இதயத்தில்..?


கற்பழிப்பும்
கொலையும்
மனித வேட்டையும்
சித்திரவதையும்
இங்கு தேசிய விளையாட்டுகளாய்
மாறிப் போனது..!
ஈரணியினரும் விளையாட்டு
வீரர்களாய் மாறிப் போனார்கள்..?

இங்கு
வானத்திலிருந்து
பொழிந்ததெல்லாம்
மூன்று மட்டும் தான்
வெடி குண்டுகள்..
உணவு பொட்டலங்கள்..
எப்போதாவது மழை.. !

இரவில்
குழந்தையை தூங்க வைக்க
'தாலாட்டு'ப் பாடிய தாய்,
காலையில் குண்டடிபட்டு
நிரந்தரமாய் தூங்கிப் போன
குழந்தைக்கு 'ஒப்பாரி'ப் பாடுகிறாள்
ஐயகோ தமிழா..


பிணங்களின் தேசத்தில்
பால் முகம் மாறாத பாலகனும்
பகடைக் காயானான்..
சுடுகாட்டு அரசனின்
பிணந்தின்னிக் கழுகுகளால்
உயிரற்றுப் போனான்...
ஐயோ தமிழா...

இங்கு
கொன்றொழிக்கப்பட்டது.
தமிழினம் மட்டுமல்ல..
யுத்த தர்மங்களும் தான் !

இப்படி
உதைத்தாலும்,
கொன்று சிதைத்தாலும்,
கேட்கத் துப்பற்றுப் போக
'தமிழன்' என்ற சொல் தான் காரணமா ?

"அழைக்கும் தூரத்தில்
'ஆறு கோடி' உறவுகள்
வாழ்ந்தார்களாமே..!
அழித்தொழிக்கப்பட்டு
அனுதினமும் ஒலித்த
அன்பின் அழுகுரல் ஓலங்கள்..
அவர்களின் புலன்களில் விழவில்லையா.?
ஆத்திரத்தால் பொங்கி எழவில்லையா.?"
கேள்விக் கணை
தொடுக்க காத்திருக்கிறது..
எதிர் கால சரித்திரப் பக்கங்கள் !


உரிமைக்காக போராடி
உயிர்களை விதைத்திருக்கிறது
தமிழினம்..
அறுவடை செய்யப்படுமா
விரைவில் தமிழீழம்.!

இளைய பட்டாளமே..
சமர் கண்ட பூமியின்
சரித்திரம் மாற்றலாம் வா..
இந்திய இராஜாங்கத்தின்
பொய்யுறக்கம் கலைக்கலாம் புறப்படு...

சந்தர்ப்பவாத அரசியல் தொலைத்து
சர்வதேச சமாதானக் கரங்களை
பற்றிக் கொண்டு 'மத்திய அரசு'
சத்தியமிட்டுச் சொல்லட்டும்..
தனி ஈழம், தமிழனுக்கென்று.!

இல்லையெனில்
இலங்கைத் தமிழர்களின்
இறுதி யுத்தம்
இளகிப் போனாலும் கூட
இன்னும் இது
'கண்ணீர் தேசம்' தான்.!

--- கீழை இளையவன் ---

FACE BOOK COMMENTS :

'இன்று ஒரு தகவல்' முகப் பக்கத்தின் கருத்துப் பதிவுகள் : 


  • Murugan NT ippadi unarchiyai thoonduvathu mathiri eluthi makkalai yen muttal aakkugiraargal.....
  • ரூபன் ராஜ் விழ விழ எழுவோம்....விழ விழ எழுவோம்.....
  • Jakir Hussain Jak தமிழண் என்று சொல்லடா தலை நிமிற்ந்து நில்லடா என்று கூவி கைகட்டி நின்று கொண்டு உள்ளோம்
  • Ahmed Ahsan 1st wrong baraba Karan
  • Somu Somasundaram பேடிகளே வீழ்த்துபட்டுவிட்டோம் என்று நினைத்து விடாதீர்கள் நாங்கள் விதைகளாகத்தான் வீழ்ந்துள்ளோம் நீங்கள் அறுத்த வினைக்கு நிச்சயம் எதிர் வினை உண்டு
  • சங்கத்தமிழன் செ.வீ.பா. Nenjam oru kanam nindru thudikkirathu.
    Like · Reply · 1 · March 17 at 12:30am via mobile
  • Basheer Ahmed VETKA PADUGIREN NANUM ORU TAMILANA IRUNDHU ANDHA APPAVI TAMIL MAKKALUKU UDHAVA MUDIYA VILLAYEA EANRU
  • Mohamed Noor Unarchiyai thunduvathu vilipunarukey .muttal aaka alla
  • Alaammal Syed Oru Naal Pesappadum Seithi, Tamilakam+ Tamilarkal Iranthu Eaethanaio Naadkal,Urimai Ilanthum Uyire Vaazlum Paavikal,Une Kirukkalum Tamilanin Alu kuralum, Paarvathi Ammaiyarin Kannirum Eathai Solla,Nadai Pinangkalukku.
  • Mohamed Noor Ovvaru manitharukum unarchi vendum. Unarchi ellaina koma stage ku pogavendiyathu than
  • Dheeni Ahamed i hate WAR...............
  • Shaja Khan முருகன் போன்ற..........பிறவுகளுக்கு இந்த வலி புரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் அவன் வேலை அப்படி
    Like · Reply · 3 · March 17 at 1:25am · Edited
  • Rifkan Matale Rox Sri Lanka Muslims and Tamil peoples joined together and fuk Sinhalese .... close Sinhalese mouth
    Like · Reply · 1 · March 17 at 3:33am
  • T Suresh Ajith கடவுளே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
  • Bala Kutty hitler ungaluku ena panunaru.. Nenga ellarum Poi pathingala avaru ketvarunu... anithi panravanungala ellathaum hitler hitlerndu solluringa.. en avanungala nethaji patel ivangaloda sethudanungala pesunga pakkalam.. ethaume pakkathula irunthu pathathu mathiriye pesurathu...
  • Riffan Zyed கவிதை வரிகளை தந்த கீழை இளையவனுக்கு நன்றி
  • Reka Govind ஈரணியினரும் விளையாட்டு
    வீரர்களாய் மாறிப் போனார்கள்..? 
    intha vaarthai pirayogam poruthamanathalla.singala veriyarkal matume athakaya kodiya seyalkalai seikinranar.tamil poralikal alla.
  • Pandi Esakki EAN RATTHAM KOTHIKKHIRATU SHIGALANIN SHAGKAI KADIKKA
  • Keelai Ilayyavan அறிவையும், விழிப்புணர்வையும், 'இன்று ஒரு தகவல்' எனும் இணைய தோட்டத்தில் விதைத்து வரும் அன்பின் நண்பர்களே...

    என் (க)விதைகளும், இங்கு விதைக்கப்பட்டுள்ளத்தில், உண்மையில் உளம் மகிழ்கிறேன். இந்த கவிதையை எழுத, ஊன்றுகோலாய் இருந்த என் தந்தையார் அவர்களுக்கும் எ
    ...See More
    Like · Reply · 8 · March 17 at 3:39pm · Edited
  • Asokane Bala tamilan vaza vendum
  • Bavathi Kaliappan Arumaiana kavithai.. Itha vida alga yaarum solla mudiathunu ninaikaren.. Thanks tamila..
    Unlike · Reply · 2 · March 17 at 1:18pm via mobile
  • Fouz Ameen கவிதை வரிகளை படிக்கும் போதே கண்ணீர் வழிகிறதே மச்சான்.. நைஸ் டா
  • Jamaludeen Jamal super vry super, each n every words brings water in my eyes, Mr, Keelai Ilayyavan vry super message
  • Riffan Zyed keelai ilayyavan : superb kavithai mama.....
  • Mathan Kumar Very nice na.
  • Zyed Raseen ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 'நச்' சுன்னு ஒரு கவிதை. தேங்க்ஸ் இளையவனே
  • Mathu Mathee ஐயா ஒரேயொரு குழந்தையையாவது என்னிடம் கொடுங்கள் அல்லது வழி சொல்லுங்களேன்!
  • Vishnu Keerthan I will the srilankan
  • Zam Zam Akbar நாம் பெற்ற பிள்ளைகளுக்கு முள்ளு குத்தினா கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை ஆனால் தமிழீழக்குழந்தைகளின் தலைகள் சிதறிகிடக்கும் காட்சிகளை கண்டும் நம்நெஞ்சம் பொருக்குமா? மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் அனைவரும் இலங்கைக்கு எதிரான நம் எதிர்ப்பை வாய்ப்புகள் கிடைக்கும் போது பதிவு செய்யவேண்டும்.
  • Arnold Akil Iniyum gandhi valila pona sari padathu avangaloda thimiruku thirupi namma thantha theriyum namma yaru tamilan power puriyum... Minnavargalai jaila vachu turture panna vidakudatha mathri pannanum......
  • Mahasin Salha vry bad srianka should pay for it... its vry soon
  • Fauji Salih Well lines dear.. "We want Tamil Ealam"
  • K Kali Dasan tharmam vellum
  • Siva Kumar eelam onre theervu
    • Maha Raja ஈழமே ! தமிழ் ஈழமே ! தவிக்குது தமிழ் மக்களின் தனி ஈழம் ?
      தனக்கென உரிமையை நிலை நாட்ட 
      தமிழ் மக்களின் நிலைப் பாடு தமிழ் ஈழம் 
      திலீபன் உண்ணாநிலை போராட்டத்தில் உயீர் போனது தொடர்து 
      கேட்டுக் கொண்டு செத்து மடியுது 

      தமிழ் மக்களும் தனி தமிழ் ஈழமும் 
      அடிமைபட்டு மீண்ட மனித இனம் அடிபட்டு தவிக்குது 
      இனவெறி யால் இலங்கையில் 
      உதவி கரம் நீட்டாமல் தன் இனத்தை ஆழிக்க உபகரணம் 
      கொடுத்து தடுக்கு தாம் நம் இந்திய அரசு 
      இறந்த உடல்களை அடக்கம் செய்ய நேரமில்லை 
      கொட்டிக் கொண்டுயிருக்கும் வெடிகளின் மத்தியில் 
      உயிருக்கு பயந்து ஓடுகிறது அப்பாவி தமிழ் இனம் 
      மனிதநேயம் மறந்து மனிதனின் பிறப்புறுப்பில் 
      வெடிவைத்து மகிழ்கிறது இனவெறிப் படை 
      இதற்கெல்லாம் முடிவை நம் எடுத்து உள்ளோம் 

      இன்று
      இனமே அளிக்கப்பட்ட பிறகு அழித்த இனத்திற்க்காக அல்ல 
      அழிவை எதிர் நோக்கி தவிக்கும் மீஞசிய இன்னல் பட்டு 
      தவிக்கும் தமிழ் இனத்திற்க்காக !
      அரசியல் ஆதாயம் தவித்து அடிபட்ட இனத்து க்கு 
      அன்பு செய்ய வேண்டி போராட்டம் நடைபெறுகிறது 
      நானும் (மகாராஜன் ) ஆதரிக்கீறேரன் 
      ஒரு தமிழ் அன்னையின் வயிற்றீல் பிறந்த தமிழ் மகனாய் ! 

      மகாராஜன்

      பாரதியார் பல்கலை கழக மாணவன் (கோவை)

      நானோ அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறை Maha Raja
  • Unlike · Reply · 3 · March 18 at 7:31pm
    • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' ஈழத்தின் கண்ணீரையும், இனி ஈழத் தமிழர்களின் எதிர்காலம் வளமடையவும், இந்த கண்ணீர் தேசத்தின் கவிதைத்துளிகள், இளைய தலைமுறையினருக்கு நல்லதொரு எழுச்சியை ஏற்படுத்தும்.

      மிகச் சிறந்த இந்த கவிதை சொற்றொடர்களை தந்திருக்கும் தம்பி கீழை இளையவனுக்கு நன்றி. 

      வலப்பு
      றம் போராளிகள்..
      இடப்புறம் எதிராளிகள்..
      நடுப்புறம் சிக்கிய 'அப்பாவிகள்'.!
      இங்கு
      இருபுறமும் புறப்பட்ட
      'துப்பாக்கி தோட்டாக்கள்'
      துளைத்துச் சிதறியது
      அப்பாவிகளின் இதயத்தில்..?

      தங்களின் கவிதை வரிகள் அருமை தம்பி .. உண்மைகளை தாங்கி நிற்கிறது 

      தமிழீழம் மட்டும் நம் குறிக்கோளாக இருக்கக் கூடாது. மகா கொடியவன், காட்டுமிராண்டி ராஜபக்சே சர்வதேச நீதி மன்றத்தின் முன் இனப்படுகொலை குற்றவாளியாக அம்மணமாக நிறுத்தப்பட்டு, தூக்கிலடப்பட வேண்டும்

      அதுவரை இந்த போராட்டங்கள் எந்நிலையிலும் வலுவிலந்துவிடக் கூடாது.
      Like · Reply · 7 · March 18 at 8:24pm
  • Shan Saran Atharmam aliyattum THARMAM vellattm
  • Shanthini J Shanthini J ellorum orey kulamey
  • Suresh Mannadiar WE ALL ARE ONE ,
  • Ram Kumar BE Tamilanda tamil vellum
  • Tharook Mohmmed Imran ipa appti irukinraner
  • Sunthara Moorthy ithuku karanama navarkaludan TN gove.. natpudan irrupathal than avargal ithai melum seigirargal
  • Maraika Basheer ungal pani men melum valarattum
  • Sathish Kumar நாமெல்லோரும் வெவ்வேறு மனிதர்கள் என்றாலும். நம்முடைய உணர்வு ஒன்றுதான் தமிழர்கள்... தொடர்ந்து போராடுவோம் வெற்றி நமக்கே,,
  • Karthik Natarajan Its better to launch missiles over rajabakshe's home...
  • Murugan Lingam tamil elam is the permanent solution


No comments:

Post a Comment