தேடல்

Saturday 7 January 2012

அழிவின் விளிம்பில்...

 பூமித்தாயின்,
கருவறை சுமக்கும்
அக்கினி குஞ்சுகளின் அழுகுரல்கள்..
நாள் குறித்து காத்திருக்கிறது.
நம் அண்டத்தையே புரட்டிப் போட !



கரும் புகை கார்பனின்,
கலவரக் கால்கள்..
ஒசோனையும் ஓட்டையிட்டு,
ஒப்பந்தம் முடித்துள்ளது !
உலக அழிவில் எனக்கும் பங்கென்று...

சுனாமியும்,
சுட்டெரிக்கும் சூரியனும்,
சாட்சி கையெழுத்திட்டு சிரிக்கிறது..?
இயற்கையை  கெடுத்த தலைகளை களையெடுக்க..!


பூமிப்பந்தே,
புதைந்து போனாலும்..
பிரிவில்லா  - இந்த பாலிதீன் புவியெங்கும்
பறந்து கொண்டே தானிருக்கும்...
புற்றீசல் போல.!
பார்க்கும் இடமெல்லாம் பாலிதீன் - நம்மை
சேர்க்கும் இடமெல்லாம் நாம் பாவி தான்..!

மனிதனின்
தடம் படாத அண்டார்டிகாவும்,
பனி உருக்கி, பழி தீர்க்க.. 
கடலுடன் காதல்..?

சாயக் கழிவும்,
சாக்கடை நீரும்,
ஓடும் நதியில், தாவி விளையாடி..
மனிதனைத் தீர்க்க மோதல்..?


மண்ணைக் கெடுத்து,
விண்ணைக் கிழித்து, இயற்கை அன்னையை,
இழிவுப் படுத்திய பாவிகளை - இயற்கை
காவு கொள்ள காலம் தூரமில்லை !

சுற்றமும், சூழலும்
இயற்கையை போர்த்திக் கொள்ளட்டும் !
அழிவென்னும் பனி அகலும் வரை..
பூமித்தாய் உயிருடன் வாழும் வரை...  

2 comments: