பசுமை மிளிரும் பூமி..
படியுயரும் காலை கதிரவன்..
பறவைகளின் உல்லாச கீதம்...
பனி படர்ந்த புல்வெளி...
மெலிந்த உடலுடன்,
மேலங்கியில்லா மேனியொன்று,
மெல்ல ஊர்கிறது..
மெத்தனம் இல்லாமல்...
மிருதுவான முகம்..
மென்மையான குரல்.!
மருவில்லா பார்வை..
பளீரென்ற பற்கள்.!
பொய் கலக்கா புன்னகை...
கதிரவனை கண்களில் வாங்கி,
களமிறங்குகிறான்..
விவசாயி !
பிறர்
பசியை போக்க,
கலப்பையுடன் களமிறங்கிய,
விவசாயி,
காத்திருக்கிறான்
பசியோடு.!
நாற்று நட்டு,
நம்பிக்கையுடன்..
உழுது, உரமிட்டு,
ஏர் பிடித்து, எற்றமிறைத்து,
வேலியிட்டு, வியர்வை சிந்தி...
களையெடுத்து
கஷ்டங்களுடன்..
கந்து வட்டிக்கு, கடன் வாங்கி,
வித்திட்ட விதைகள் - அரும்பி
தலை தொங்கி, அறுவடை செய்து...
களம் அடித்து, காற்றில் தூற்றி
உமி அடித்து, உறையிலிட்டு..
பண்டக சாலையில் பாதுகாத்து,
பசியுடன் காத்திருக்கும் நேரம்...
அரசாங்க கொள்முதல்
அமோக விலை குறைப்பில்,
அதிரடியாய் அடியெடுக்க.?
தலை தொங்கினான்.?
திக்கு தெரியாமல்..
அவன்
வியர்வையின் வாசனை,
காயும் முன்னே...
பிறர்
ReplyDeleteபசியை போக்க,
கலப்பையுடன் களமிறங்கிய,
விவசாயி,
காத்திருக்கிறான்
பசியோடு.! -
என்னுள் நெகிழூட்டும் வரிகள்..
NICE TOPIC
ReplyDelete