தேடல்

Sunday 8 January 2012

ஆலவிருட்சம்

அறிவிலிகளின்,
ஆனந்த தாண்டவம் - சாதிய
வேர்களின் அசுர சூட்சமம் !


 சாதி விதை தூவியவன் - மனதில்
சாந்தி இல்லாமல் சமாதியாகிறான்.?

சாதியை சந்தைபடுத்தியவன்,
விட்டு சென்ற விதைகளின் மிச்சம்
இன்னும் முளைக்கிறது - நம்மில்
அழியாத ரணங்களாய்..?


சிலையினை விதைத்த மனிதன் - தன்
சிந்தனையை விதைக்கத் தான்,
மறந்தே போனான்...

நீயும்,
நானும்,
சகாக்களானால் சாதிகளேது.?

சிந்தித்துப் பார் !
சீக்கிரம் விதை - உன்
சிந்தனை விதைகளை...



அறிவு நீர் ஊற்று - முளை விடும்
நாட்டுப்பற்று.!
சகோதரத்துவத்தை,
உரமாய் ஊட்டு - மனிதம்
மரமாய் எழும்..!

2 comments:

  1. சிலையினை விதைத்த மனிதன் - தன்
    சிந்தனையை விதைக்கத் தான்,
    மறந்தே போனான்...

    நீயும்,
    நானும்,
    சகாக்களானால் சாதிகளேது.?

    அருமையான வரிகள்..

    உங்களின் கவிதைகளுக்கு hats off..

    ReplyDelete